இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளில் 19 முக்கிய தொடருந்துகள் இன்று மீண்டும் இயக்கப்பட உள்ளன. கரையோரம், புத்தளம், களனிவெளி மார்க்கங்களில் சேவை சாதாரண நிலைக்கு திரும்புகிறது.
இலங்கையில் நவம்பர் 16 முதல் தொடரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடரில் 159 பேர் உயிரிழந்துள்ளனர்; 203 பேர் காணாமல் போயுள்ளனர். 8.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.2 இலட்சம் பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.