நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
ரயில்வே போக்குவரத்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பதுளை–நானு ஓயா இடையேயான மலையக ரயில் பாதை, சுற்றுலாவின் மையமாக விளங்குகிறது.
மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளன. இப்படிச் செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது
உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு இடையூறாக இருப்பதாக விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த பகுதிகளை விட்டு பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.
சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.