நாடளாவிய போதைப்பொருள் ஒழிப்பு சோதனை: ஒரே நாளில் 585 பேர் கைது
நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை பொலிஸார் மேற்கொண்ட நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை பொலிஸார் மேற்கொண்ட நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, நேற்று (14) மட்டும் நாடு முழுவதும் 29,367 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த சோதனைகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், திறந்த பிடியாணைகளுடன் (open warrants) இருந்த 142 பேரும் இந்நடவடிக்கையின் போது பிடிபட்டுள்ளனர்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்ட பல சம்பவங்களும் பதிவாகியுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 352 ஓட்டுநர்களும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 91 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், போக்குவரத்து தொடர்பான பிற குற்றச்செயல்களுக்கு எதிராக 4,318 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.