உயிர்கள் தொடர்பாக நாங்கள் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்போம்," என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று ( 05) வெளியிட்ட சஜித் பிரேமதாச, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோவால் ஈரானிய போர்க்கப்பல் மீது நேற்று (04) நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்து அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கோரினார்.
இந்த கப்பலில் 180 பேர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு மற்றும் இராணுவ பயிற்சிகளில் பங்கேற்ற பிறகு ஈரானுக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்று இரங்கல் செய்தி பதிவு செய்தார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் சிக்கி, இலங்கைக் கடற்பகுதிக்கு அருகே மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பான சர்வதேச கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர்களில் 32 மாலுமிகள் காலி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 279,328 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.
ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவிதத் தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானசேவைகளை இன்று (மார்ச் 1, 2026) மாலை 5.00 மணி வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு உள்ளதாகவும், புதிய இறக்குமதிகள் இல்லாவிட்டாலும் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.