கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

பிடிபட்ட சந்தேகநபர், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். பின்னர், அங்கு வந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அந்த வழியே சென்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சிவில் பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இந்த நபர், திவுலபிட்டியவில் வைத்து நீர்கொழும்புப் பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 31 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (15) பிற்பகல் கட்டுநாயக்க பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோது, அதனைப் பொருட்படுத்தாமல் சந்தேகநபர்கள் தப்பியோடினர். தேவமொட்டாவ பகுதியில் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டு, அவர்கள் ஓடியபோது, பொலிஸார் ஒருவரைப் பிடித்தனர்.

பிடிபட்ட சந்தேகநபர், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். பின்னர், அங்கு வந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அந்த வழியே சென்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சந்தேகநபர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் பொலிஸாரிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் 2008 முதல் 2010 வரை கட்டுநாயக்க நகர பாதுகாப்புப் பிரிவில் சிவில் பாதுகாப்பு படை வீரராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -