ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் இனி பின்வாங்க வழியே இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் முக்கியக் கடற்படைத் தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல்களை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் உடனான போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு தனது சீனா பயணத்தை ஒத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் மே 14-15 திகதிகளில் அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஈரானுடனான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் சனிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்றும், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.