நீர்கொழும்பு சிறை வன்முறை: கைதிகள் குழு போகம்பர சிறைக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், கைதிகள் குழு ஒன்று கண்டி பல்லேகெலேயில் உள்ள போகம்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
நீர்கொழும்பு சிறை வன்முறை: கைதிகள் குழு போகம்பர  சிறைக்கு மாற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (ஜூலை 5) தொடங்கிய மோதல் இன்று (ஜூலை 6) மேலும் தீவிரமடைந்த நிலையில், அங்கிருந்த கைதிகள் குழு ஒன்று கண்டி, பல்லேகலயில் உள்ள போகம்பர திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிறைக்குள் பதற்றத்தைக் குறைத்து இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறையில் உள்ள இரண்டு கைதிகள் குழுவிற்கும் இடையிலான மோதலே இந்த வன்முறைக்கு அடிப்படை காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 சிறை அதிகாரிகளும் அடங்குவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நனயக்கார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூவர் கொண்ட சிறப்புக் குழுவை அமைச்சரவை நியமித்துள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த ஃபெர்னாண்டோ தலைமையிலான இந்த குழு, சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்.

இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நனயக்கார கருத்து தெரிவிக்கையில், "மனித உயிர்களை இழந்தது மிகவும் வேதனையானது. நிறுவனத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் நான் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று உருக்கமாக தெரிவித்தார். மேலும், உண்மைகளை கண்டறிந்து, இனி இது நிகழாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே தனது கவனம் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -