ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா? 2 நாளில் தீர்மானம் என டிரம்ப் பச்சைக்கொடி!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக, பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தத் தீர்வும் இல்லாமல் முடிந்த நிலையில், புதிய முயற்சியாக இந்த கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன. நீண்டநாள் தீர்வை நோக்கி முன்னேறுவதற்கான முயற்சிகள் தீவிரமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றியடையுமா என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை குறைக்க இது முக்கியமான முன்னேற்றமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
