அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் 2 நாளில் தொடங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்க தரைப்படைத் தாக்குதல் அவசியமில்லை என்றும், வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமே வெற்றி பெறுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.
அமெரிக்க படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எங்கு உள்ளன, அவை எவ்வாறு நகர்கின்றன என்பதற்கான தகவல்களை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பிந்தைய சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.