மட்டக்களப்பை அதிரவைத்த தொடர் கொலை-கொள்ளை: மயக்க மருந்து வழங்கிய முக்கிய சந்தேகநபர் கைது

மட்டக்களப்பில் பெண்களை குறிவைத்து நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய முன்னேற்றம். மயக்க மருந்து வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கொழும்பில் கைது.
மட்டக்களப்பை  அதிரவைத்த தொடர் கொலை-கொள்ளை: மயக்க மருந்து வழங்கிய முக்கிய சந்தேகநபர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மட்டக்களப்பு மாவட்டத்தை உலுக்கிய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் முக்கிய திருப்பமாக, பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தாக்குதல் நடத்திய கும்பலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து முகவர் ஒருவர், கொழும்பில் நடைபெற்ற விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கைது, தொடர்ச்சியாக நடந்த மர்ம சம்பவங்களுக்கான விசாரணையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இருந்து பாழடைந்த கிணற்றில் விழுந்த நிலையில் 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே இடத்தில் காணாமல் போனதாக கருதப்பட்ட மற்றொரு பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மேலும், இளம் தாயின் சிறிய குழந்தைகள் வயல்வெளியில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், 24 மணிநேரத்துக்குள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண், அவரது கணவர், உறவினர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்கள் அடங்குகின்றனர். 

இந்த கும்பல் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மயக்க மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், மேலும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், கும்பலுக்கு மயக்க மருந்துகளை வழங்கி இயக்கியதாக சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -