மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு, பொலிஸார் மீட்டனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மட்டக்களப்பு, காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் (ஆற்றுப் பகுதி) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. செவ்வாய்க்கிழமை (மே 19) மாலை 5 மணியளவில் பொதுமக்கள் சடலத்தை மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டு தலைமையகப் பொலிஸார், சடலத்தை மீட்டு, அது ஆணின் சடலம் என உறுதிப்படுத்தினர். எனினும், இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பிரேத பரிசோதனைக்காகச் சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்குத் தேவையான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மட்டு தலைமையகப் பொலிஸார் தொடர்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -