ரஷ்ய சுற்றுலாப் பயணியின் ரூ.16.9 லட்சம் மதிப்புள்ள பை திருட்டு: STF அதிரடியில் சில மணி நேரத்தில் மீட்பு!
இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவரின் திருடப்பட்ட பணப்பையை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) விரைவான நடவடிக்கையின் மூலம் மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததன்படி, குறித்த சுற்றுலாப் பயணியின் பணப்பை அடங்கிய பையில் சுமார் 1.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூலை 31ஆம் திகதியன்று, கிடைத்த தகவலுக்கு அமைய, பொத்துவில், குடகல் பகுதியில் உள்ள இரண்டாவது குறுக்கு வீதியில் வைத்து சந்தேகநபரை, அறுகம்பை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள்கைது செய்தனர். கைது செய்யப்படும் போது அவரிடம் திருடப்பட்ட பை இருந்தது.
கைது செய்யப்பட்டவர் பொத்துவில், பாசறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணியுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.