நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், கைதிகள் குழு ஒன்று கண்டி பல்லேகெலேயில் உள்ள போகம்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் ஆழ்ந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்ததாகக் கூறிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.