போராட்டம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் – நாமல் ராஜபக்ஷ
போராட்டம் மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போராட்டம் மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (13) நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், போராட்டம் என்ற பெயரில் சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டினார். அந்தச் சூழலில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதையும், சில இளைஞர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பொது மேடைகளில் தோன்றி ஆலோசனைகள் வழங்கிய சிலர் தற்போது பொறுப்பின்றி நடந்து கொண்டிருக்கின்றனர் என்றும், அந்த இளைஞர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியதாகிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
போராட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களும் வெளிப்படையாக ஆராயப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதற்காக உத்தியோகப்பூர்வ ஆணைக்குழு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.