இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் புதிய வரி; வாகன விலைகளில் அதிகரிப்பு
இது 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி என்றும், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் அரோஷா ரோட்ரிகோ தெரிவித்தார்.
இது 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி என்றும், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய வரி சுங்கத்திலேயே வசூலிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (13) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் பேசிய அரோஷா ரோட்ரிகோ, "ஒரு வாகனத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால், 2.5% என்பது ஓரளவு கவனிக்கத்தக்க வரியாகும். எளிமையாகச் சொன்னால், 100 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தின் விலை சுமார் 2.5 இலட்சம் ரூபாய் அதிகரிக்கிறது.
எனவே, வரி சேர்க்கப்பட்டுள்ளதால், வாகன விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்," என்று அவர் கூறினார்.
இருப்பினும், 'தித்வா' அனர்த்தத்துக்கு பிறகு தற்போது வாகனங்கள் ஆர்வத்துடன் வாங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.