முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இரண்டு அரச பதவிகளுக்கான சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜூலை 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச நிறுவனங்களில் இரண்டு பதவிகளை ஒரே நேரத்தில் வகித்துக்கொண்டு, இரு பதவிகளுக்குமான சம்பளத்தையும் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டில் சுகீஸ்வர பண்டார முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் குழுவில் பணியாற்றியதுடன், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதவிகளுக்குமான சம்பளத் தொகைகளையும் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பதவி வகித்த காலத்தில் அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகவும், அரச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் மற்றும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -