இலங்கையின் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று மத்தேகொட கடற்படைத் தலைமையகத்தில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே, சட்ட ஆலோசகரின் அறிவுரையை ஏற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, ஜூலை 8 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பிணை மனு மீதான உத்தரவும் அன்றே அறிவிக்கப்படும்.
இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின் இலங்கையின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும்.
இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு மரணங்கள் 31 ஆக அதிகரித்துள்ளன. மொத்தமாக 51,049 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோக நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
எல்பிட்டிய - மாபலகம வீதியின் வதுரவில பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இரண்டு அரச பதவிகளுக்கான சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜூலை 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ளும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.97 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.