ஒரு கிராம் ஹெரோய்ன் சுமார் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த மருந்தகத்தில், வைத்திய விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தமை முற்றுகையின்போது தெரியவந்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் வலிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடம்பன், மாத்தளை, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய இடங்களில் நேற்று (25) நிகழ்ந்த தனித்தனி விபத்துகளில் 7 வயது சிறுமி, 45 மற்றும் 63 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மூன்று வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக லலித் கன்னங்கர அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவைப் பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
இந்தத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதன் மூலம், தகுதியான குடும்பங்களுக்கு நலன்புரி உதவி சென்றடையும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட பணத்தில் 6.5 மில்லியன் ரூபாய் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதன் தாக்கம் போதைப்பொருள் பாவனைக்கு அடுத்தபடியாக சமூகத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேனக்க பல்லேதென்ன சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார்.
இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலமாக மீட்கப்பட்டவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளின் அமைதியின்மையின்போது சிறை வைத்தியசாலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.