இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
இரத்மலானை, கந்தவல வீதியில் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.