தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம்

தெஹிவளை கவ்டான பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தெஹிவளை, கவ்டான பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது தந்தை காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கவ்டான பகுதியின் சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றை இலக்கு வைத்தே இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்களின் 52 வயதான தந்தை உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவும் மோதலின் பின்னணியிலேயே இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நோக்கில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT