பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு

எயார்பஸ் ஒப்பந்த விவகாரத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் காலை நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானார். அங்கு அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவரை எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர