இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு!
சம்பவத்தின் சிசிடிவி வீடியோக் காட்சிகளில், முன்னாள் இராணுவ அதிகாரி வரவேற்பறையில் அமர்ந்திருக்க, தூதரக அதிகாரி அவரை அணுகி, வாக்குவாதம் ஏற்படுவது தெரிகிறது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அல்தாயர் அடுக்குமாடிக் குடியிருப்பில் (Altair apartment complex) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சம்பவத்தின் சிசிடிவி வீடியோக் காட்சிகளில், முன்னாள் இராணுவ அதிகாரி வரவேற்பறையில் அமர்ந்திருக்க, தூதரக அதிகாரி அவரை அணுகி, வாக்குவாதம் ஏற்படுவது தெரிகிறது.
மேலும், முன்னாள் இராணுவ அதிகாரி மீது தூதரக அதிகாரி துப்புவதும், பின்னர் அவரை உடல்ரீதியாகத் தாக்குவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.
குறித்த வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு உள்ளதாகக் கூறப்படுவதால், மேற்படி முறைப்பாட்டை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர