பம்பலப்பிட்டி – தெஹிவளை கடற்கரையோர சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற உத்தரவு

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் சட்டவிரோத ஹோட்டல்களை, எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் அகற்ற கரையோரம் பேணல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.
பம்பலப்பிட்டி – தெஹிவளை கடற்கரையோர சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற உத்தரவு
AI generated image
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு - பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் ஹோட்டல்கள் மற்றும் கட்டடங்களை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  

குறித்த பகுதிகளில் உள்ள சட்டவிரோத நிறுவனங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றுவதற்கான பணிப்புரைகளை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ அதிகார சபையினர் விடுத்துள்ளனர்.  

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கரையோர வலயப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறும் நிறுவனங்கள் மற்றும் கட்டுமானங்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -