சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு - வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து: பேருந்து சாரதி பலி

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. பேருந்து சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு - வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து: பேருந்து சாரதி பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இந்தப் பேருந்து, வெல்லம்பிட்டி அம்பகஹ சந்தி பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனினும், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -