ரூ.60 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர் கைது

ஹொரண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவராகப் போலியாக நடித்து ரூ. 60 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட 53 வயதுப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ரூ.60 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணராக நடித்து, சுமார் ரூபாய் 60 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட 53 வயதுப் பெண் ஒருவர் ஹொரண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபாவ பகுதியில் வசித்து வந்த இவர், பின்னர் ஹொரணவில் உள்ள ஒரு வீட்டுத் தொகுப்பில் வசித்து வந்ததாகவும், நீண்ட காலமாக இந்த மோசடித் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றில் மருத்துவ சின்னங்களைப் பொருத்தி, பல பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

இந்தச் சந்தேக நபர், பல்வேறு நோய்களுக்கான சிறப்பு மருந்துகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாகக் கூறியுள்ளார். எனினும், நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் இலங்கையில் பயன்படுத்த அங்கீகரிக்கப்படாத தரமற்ற பொருட்கள் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் கொழும்பு துறைமுகத்தில் வந்துள்ளதாகவும், அவற்றைத் தயார்படுத்தப் பணம் தேவைப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்களை நம்பவைத்து, பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்து, சுமார் ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு நபர்களிடமிருந்து ரூ. 60 மில்லியனைச் சேகரித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கம்பஹா, மதுரவளை, மில்லனிய, பண்டாரகம, ஹொரண மற்றும் இங்கிரிய உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்தும், அப்பகுதிகளில் உள்ள பல முக்கிய கோயில்களின் பிரதம தலைவர்களிடமிருந்தும் பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் புகார்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மருத்துவ சபை மற்றும் ஆயுர்வேத மருத்துவ சபையில் இந்தப் பெண் பதிவு செய்யப்படவில்லை என்பதும், போலியாக மருத்துவராக நடித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேக நபரின் பெயரில் இரண்டு போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மோசடி மூலம் பெறப்பட்ட பணம் வெளிநாட்டு நாணயமாக மாற்றப்பட்டு, பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பின் கீழ் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -