மீன்பிடி தடையை நீக்கக் கோரி, ஜனாதிபதியுடன் மீனவர்கள் கலந்துரையாடல்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
சத்தியாக்கிரகம் இன்று 9வது நாளாக தொடர்கிறது.
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் மூலம் மீன்பிடிப்பதற்கான தடையை நீக்கக் கோரி, மீனவர்கள் 5 ஆம் திகதி முதல் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீனவர்கள் பல முறை அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்த போதிலும், அவை அனைத்தும் தீர்வு இல்லாமல் முடிவடைந்த நிலையில், இன்று ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசவுள்ளனர்.