புதன் அஸ்தமனம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 28 முதல் திடீர் ராஜயோகம்!

இந்த மாத இறுதியில், பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் அஸ்தமன நிலைக்கு செல்கிறார். இந்த கிரக மாற்றம் சிலருக்கு சவால்களைத் தரினும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் அளிக்கவுள்ளது.

பெப்ரவரி 19, 2026 - 06:43
புதன் அஸ்தமனம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 28 முதல் திடீர் ராஜயோகம்!

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என்று போற்றப்படும் புதன், அறிவு, வாக்காற்றல், வணிகம் மற்றும் தொடர்பு திறன்களை பிரதிபலிக்கிறார். அதனால் புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த மாத இறுதியில், பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் அஸ்தமன நிலைக்கு செல்கிறார். இந்த கிரக மாற்றம் சிலருக்கு சவால்களைத் தரினும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் அளிக்கவுள்ளது.

பிப்ரவரி 28 முதல் மார்ச் 13 வரை நீடிக்கும் இந்த காலகட்டத்தில், அந்த ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும் நல்ல மாற்றங்களை காணும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள், வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல சுப பலன்கள் உருவாக வாய்ப்புள்ளது.

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனம் சிறப்பான காலத்தைத் தொடங்குகிறது. தொழிலில் முன்னேற்றமும், தனிப்பட்ட வாழ்வில் அமைதியும் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் அதிர்ஷ்டம் துணை நிற்கும். திடீர் பணவரவால் நிதிநிலை மேம்படும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், உழைப்புக்கான அங்கீகாரமும் கிடைக்கும். கடந்த கால முதலீடுகள் நல்ல பலனை தரத் தொடங்கும். பயண வாய்ப்புகளும், குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரமும் கிடைக்கலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் அஸ்தமனம் மகிழ்ச்சியும் ஆதாயங்களும் நிறைந்த காலமாக அமையும். இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள் பெரிய வெற்றியைத் தரும். பொறுப்புகள் அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாக கையாளும் திறன் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கு இது சாதகமான நேரம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முதலீட்டுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் நலமும் மன நலமும் உறுதியாக இருக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் பெறும் காலத்தை அனுபவிப்பார்கள். நீண்ட காலமாக இருந்த நிதி சிக்கல்கள் தீர்வை காணும். வாழ்க்கையில் வைத்திருந்த பல ஆசைகள் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர புரிதலும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் நல்ல செய்திகள் வரலாம். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்புகளும் உருவாகும். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த காலத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தை அடைவார்கள்.

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஜோதிட பலன்கள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!