நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருள் விலை குறைப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய விலைகள் இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.
அதன்படி, ஒட்டோ டீசல் லீட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டு ரூ. 277 ஆகவும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டு ரூ. 292 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஒக்டேன் 95 ரக பெட்ரோல், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளை இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.