இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது
இந்த காலகட்டத்தில் அதிகபட்ச தினசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 12 அன்று பதிவாகியுள்ளது, இதில் 12,731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
2026ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு (SLTDA) தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் பிப்ரவரி 12 வரை மொத்தம் 401,787 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அதிகபட்ச தினசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 12 அன்று பதிவாகியுள்ளது, இதில் 12,731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களில் இந்திய பிரஜைகள்அதிகம் என்றும் அவர்களின் எண்ணிக்கை, 70,880 பேர் என்று SLTDA தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 44,053 பேர், ரஷ்யாவிலிருந்து 36,949 பேர், ஜெர்மனியிலிருந்து 28,332 பேர் மற்றும் சீனாவிலிருந்து 22,309 பேர் வந்துள்ளனர்.
மேலும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் 124,460 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.