டி20 உலகக் கோப்பை: இலங்கையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; பொலிஸார் களத்தில் 

பார்வையாளர்கள் பெரிய பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 6, 2026 - 08:29
டி20 உலகக் கோப்பை: இலங்கையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; பொலிஸார் களத்தில் 

டி20 உலகக் கோப்பையைப் பார்வையிடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,500 பொலிஸ் அதிகாரிகளையும் 600 போக்குவரத்து அதிகாரிகளையும் பணியில் அமர்த்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, பார்வையாளர்கள் பெரிய பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!