நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; வெளியான தகவல்                                                                                      

இறந்தவர் மற்றொரு குழுவுடன் அவிசாவளை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்குள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

பெப்ரவரி 5, 2026 - 10:46
பெப்ரவரி 5, 2026 - 11:09
நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; வெளியான தகவல்                                                                                      

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் மற்றொரு குழுவுடன் அவிசாவளை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்குள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

இறந்தவர் மாலபே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் அவிசாவளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!