நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
2026ஆம் ஆண்டுமுதல் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறையில் கனடா முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக, முதுகலை மற்றும் முனைவர் பட்ட பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு இது பெரும் நன்மையாக அமைகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோஹ்ரான் மாம்டானி, நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நட்புணர்வுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.
பிரித்தானியாவில் தற்போது வாழும் மக்களில் சுமார் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் மக்கள் தொகை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் உள்மங்கோலியா மாகாணம், பாடோ நகரில் நடைபெற்ற “உலகின் சோம்பேறி மனிதன்” பட்டத்திற்கான விசித்திரமான போட்டியில் ஒருவருக்கு ரூ.37,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசு, உயர்ந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த அரை நூற்றாண்டில் இடம்பெறாத மிகப்பெரிய குடிவரவு மாற்றமாகக் கருதப்படுகிறது.
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஏற்பட்டுவரும் வெறுப்பு மற்றும் மோசமான அணுகுமுறையின் காரணமாக, பலரும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அந்நாட்டு அரசு மருத்துவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கனடாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் விலைவாசி அழுத்தம், அந்நாட்டில் மக்களின் உணவு வாங்கும் பழக்கங்களை பெரிதும் மாற்றி வருகிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில், பிரெஞ்சு கடற்கரைகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சிறிய படகு என்ஜின்களை உடைக்கும் காட்சிகளைப் பிரிட்டிஷ் கண்காணிப்புக் குழுவினர் (British vigilantes) வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் விசா பெறுவதிலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் (88) உடல்நலம் காரணமாக நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மன்விதா தரேஷ்வர் மற்றும் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளனர். மன்விதா தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை மீண்டும் வெடித்ததில், 13 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பலும் எரிவாயுவும் பறந்து பரவின. இதையடுத்து அதிகாரிகள் உச்ச அபாய எச்சரிக்கையை அறிவித்தனர்.