பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டியதால் பிரித்தானிய தம்பதியினருக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
“சுதந்திர பாலஸ்தீனம், இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21ஆம் தேதி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகளில் ஒட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த லூயிஸ் கேப்ரியல் டி Lewis Gabriel D) மற்றும் அனுஷி எம்மா கிறிஸ்டின் (Anushi Emma Christine) ஆகிய தம்பதியினருக்கு இந்தியாவை உடனடியாக விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கர் (Pushkar)பகுதியில் பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஸ்டிக்கர்களை பல இடங்களில் ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, “சுதந்திர பாலஸ்தீனம், இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21ஆம் தேதி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகளில் ஒட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செயற்பாடு அரசியல் சார்ந்ததாக கருதப்பட்டதால், சுற்றுலா விசா விதிகளை தம்பதியினர் மீறியுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து குற்றவியல் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் 2025ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவர்களின் விசாக்களை ரத்துச் செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.