நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
நடிகை பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான 'லோலியா ஸ்கின்' நிறுவன அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து அரச ஆய்வாளரிடம் அறிக்கை பெறுமாறு கொழும்பு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியில் சிக்கியது. விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 200 பயணிகளும் பாதுகாப்பாக தப்பினர்.
இலங்கையில் நேற்று ஒரே நாளில் வீதி விபத்துகள், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் மற்றும் மர்ம மரணங்கள் எனப் பல துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரக்காபொல, கித்துல்கலை, தொம்பகஹவெல, பொலன்னறுவை, கல்பிட்டி, தங்காலை பகுதிகளில் நடந்த சம்பவங்களின் முழு விவரம்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.
தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்த 51 போதைப்பொருள் பொதிகள், இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு நேற்று மாலை தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.