பிப்ரவரி இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்
மிதுனத்தின் அதிபதி புதன். இதற்கிடையில், மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரன் பிப்ரவரி 26ஆம் தேதி மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் குரு–சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு, சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.
வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக போற்றப்படுபவர் குரு பகவான். கிரகங்களில் மிகவும் மங்களகரமானவராகக் கருதப்படும் குரு, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு ஆண்டுக்காலம் தங்குவார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான அவர் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
மிதுனத்தின் அதிபதி புதன். இதற்கிடையில், மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரன் பிப்ரவரி 26ஆம் தேதி மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் குரு–சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு, சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் ஒரு அளவு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு இது சிறப்பு பலன்களை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் முதல் வீட்டில் உருவாகுவதால் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். நேர்மறை சிந்தனை மேலோங்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும்; திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல தொடர்புகள் உருவாகலாம். நிதிநிலை மேம்பட்டு, பல்வேறு வழிகளில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசிக்காரர்களுக்கு 9ஆம் வீட்டில் இந்த யோகம் அமைகிறது. அதிர்ஷ்டம் துணைநிற்கும் காலமாக இது அமையும். நீண்டநாள் நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பு அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகலாம். ஆனால் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி ராசிக்காரர்களுக்கு 10ஆம் வீட்டில் இந்த யோகம் அமைவதால் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாப வாய்ப்புகள் உருவாகலாம். எனினும் அவசர முடிவுகளைத் தவிர்த்து, ஆராய்ந்து செயல்படுவது நல்லது.
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட தகவல்கள் ஜோதிட அடிப்படையிலான பொதுவான கணிப்புகள் மட்டுமே. இதன் துல்லியத்திற்கோ அல்லது விளைவுகளுக்கோ உறுதி அளிக்க முடியாது.