LPL விதிகளை மீறியதற்காக வனிந்து மற்றும் பினுராவுக்கு அபராதம்
ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் ஒழுங்கு விதிகளை மீறிய கண்டி ஃபால்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்க LPL ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி வனிந்துவுக்கு போட்டி பணத்தில் 25 சதவீதமும், பினுராவுக்கு போட்டி பணத்தில் 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் அணிகளின் வீரர்களின் ஒழுக்கம் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தும் வகையில் LPL போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.