டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற பரபரப்பான இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பிரதான சந்தேக நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் கைப்பற்றப்பட்டதுடன், அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர இக்கைதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்படுவதாகப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -