மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி

விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (04) காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதில் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வீதியின் எதிரே பயணித்த இ.போ.ச பஸ் செல்வதற்கு ஏதுவாக ஓட்டோ மரத்திற்கு அருகாமையில் வேகம் குறைக்கப்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓட்டோவின் பின் ஆசனப் பக்கமே மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் ஓட்டோ சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். 

நெடுங்காலமாக மக்கிப்போயிருந்த அந்த யூக்கலிப்டஸ் மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பலமுறை அறிவித்தும், அதற்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாததாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -