ஹட்டனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்
ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று (மார்ச் 12) காலை 11 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்.
டிக்கோயா பகுதியிலிருந்து டயகம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் சாரதி உட்பட மூவர் பயணித்திருந்தனர். அவர்கள் தோட்டப் பகுதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். முச்சக்கரவண்டிக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளத்தில் விழுந்த வாகனத்தை மீட்க முயன்ற போது அது மீண்டும் கீழே உருண்டு செல்லும் அபாயம் ஏற்பட்டது. அதில் அருகில் நின்ற நபர் ஒருவர் கடைசியில் உயிர் தப்பியுள்ளார்.
அதிக வேகம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ள ஹட்டன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.