சூர்யகுமார் நீக்கம்: அயர்லாந்து-இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான புதிய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மோசமான பேட்டிங் ஃபார்மே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றிருந்த போதிலும், அதில் தலைவர் சூர்யகுமாரின் தனிப்பட்ட ஆட்டம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
தொடர்ந்து சொதப்பி வந்த அவரால், நீண்ட இடைவெளிக்குப் பிறகும் பழைய ஃபார்மை மீண்டும் பெற முடியவில்லை. இதனால், அவர் தலைவர் பதவியில் இருந்து மட்டுமின்றி முழு அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திலக் வர்மா துணைத் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். இந்த மாத இறுதியில் இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் தொடருக்கான 16 உறுப்பினர்கள் கொண்ட அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
புதிய இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (தலைவர்), திலக் வர்மா (துணைத் தலைவர்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி வரும் 2028 டி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள இளம் மற்றும் தாக்குதலான அணியாகக் கருதப்படுகிறது.