இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.
தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.