நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Women's World Cup), தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பத்தாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்தும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
நேற்று நடந்த இருவேறு விபத்துகளில் மிரிஹானவில் 5 வயது சிறுவனும், ஹெட்டிபொலவில் 12 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். நீச்சல் குளத்தில் மூழ்கி ஒரு சிறுவனும், மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு சிறுமியும் பலியாகியுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவின் கேப்பாபுலவில் இராணுவத்தால் நடத்தப்படும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு கரைத்துறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்த செயலை பிரதேச சபை தவிசாளர் வன்மையாக கண்டித்துள்ளார்.
தங்கம் ஒரு அவுன்ஸின் விலை $4,000ஐ தாண்டி நேற்று வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடக் காரணம்.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.
இன்று இலங்கையின் வடக்கு, வடமத்திய, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை (புதன்கிழமை 08) நடைபெறவுள்ளது. "வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்" என்ற தொனிப்பொருளில் 16 ஆய்வுத் தடங்களில் மாணவர்கள் தமது ஆய்வுகளை அளிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி பெயர்களைப் பயன்படுத்தி, பெண்களுடன் உல்லாசம் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அவதானம்!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவம். நீதிமன்ற உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த புறாக்கள் காணாமல் போனதால், பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நாகொடவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 23 வயது இளைஞன் கைது. ஒற்றை தோட்டாவை சுடக்கூடிய தானியங்கி துப்பாக்கி பறிமுதல்.
சட்டப் படிப்பில் கவனம் செலுத்தி வரும் மாணவியான சம்ரிதிக்கு, சமையலிலும், குறிப்பாக பேக்கிங்கிலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்த ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக விட்டுவிடாமல், அவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் 'லா ஜோய்' (La Joie) என்ற பெயரில் தனது வீட்டிலேயே ஒரு பேக்கரியைத் தொடங்கினார்.
ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.