இலங்கையின் திறக்கப்பட்டுள்ள முதலாவது விந்தணு வங்கி 

கொழும்பில் உள்ள காசல் பெண்கள் வைத்தியசாலையில் இலங்கையின் முதலாவது விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் திறக்கப்பட்டுள்ள முதலாவது விந்தணு வங்கி 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் உள்ள காசல் பெண்கள் வைத்தியாசலையில் இலங்கையின் முதலாவது விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF) போன்ற கருவுறுதல் சிகிச்சைகளில் பயன்படுத்த தானம் செய்யப்பட்ட விந்தணுக்களை சேகரித்து, சேமித்து, வழங்கும் ஒரு வசதி ஆகும். 

ஆண் மலட்டுத்தன்மை பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது கருத்தரிக்க விரும்பும் பெண்கள் உட்பட தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு உதவ இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சேவை கடுமையான தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையின் கீழ் முன்னெடுக்கப்படும் என்றும், நன்கொடையாளரின் தனியுரிமை மற்றும் பெறுநரின் இரகசியத்தன்மை இரண்டும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று வைத்தியசாலையில், பணிப்பாளர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயன கூறியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக நன்கொடை அளிப்பவர்கள் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

இலங்கையில் இனப்பெருக்க சுகாதார சேவைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில், விந்தணுவை தானம் செய்வதன் மூலம் இந்த முயற்சியை ஆதரிக்குமாறு வைத்தியசாலை பொதுமக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -