மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், உடனடியாக தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.
பல ஆண்டுகளாக அச்சிடப்படாத தேசிய அடையாள அட்டைகளுக்கான சுமார் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் ஆட்பதிவு திணைக்களத்தில் குவிந்துள்ளதாகத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்த 51 போதைப்பொருள் பொதிகள், இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு நேற்று மாலை தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.