குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்வு; இன்றிலிருந்து மழை குறையும்
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்ந்து வருவதால், இன்று (23) முதல் நிலவி வந்த மழைவீழ்ச்சி படிப்படியாக குறையும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.