அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ம் கட்டம் தொடக்கம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடிக்கல் நாட்டினார்!

அநுராதபுரத்தின் 4 பிரதேசங்களில் உள்ள 67,000 குடும்பங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்தார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ம் கட்டம் தொடக்கம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடிக்கல் நாட்டினார்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 67,000 குடும்பங்களுக்குச் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

1990-களின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதிகளில் பரவி வரும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்குச் சுத்தமான குடிநீர் இல்லாததே முதன்மைக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, "இத்திட்டம் வெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம்" என்று சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமைக்கும் (JICA), திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றிற்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இப்பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்து மக்களுக்குப் பலன்களை வழங்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வரலாறு முழுவதும் பல்வேறு நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் நாட்டின் சுமார் 60% மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர் வசதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் அடுத்த வருடத்தில் மட்டும் 2000 கோடி ரூபாய் செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் மேலும் 10 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

விவசாய மக்களுக்குச் சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காகக் கடந்த குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்:

உர மானியத்தை இருமடங்காக அதிகரித்தமை.

'டித்வா' புயலினால் அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு வரலாற்றில் அதிகூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்கியமை.

நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகூடிய நிதியை ஒதுக்கியமை.

பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்க நடவடிக்கை எடுத்தமை.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -