ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது
2024 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், நேற்று (23) நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
