மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக கூறி 2 மாத குழந்தையுடன் இளம் பெண் தீவைத்து கொலை

கொல்ஹன் சிங்கு சிறிய காயங்களுடன் உயிர் தப்பி கிராமத்தை விட்டு ஓடியார். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.

பெப்ரவரி 21, 2026 - 05:34
பெப்ரவரி 21, 2026 - 05:36
மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக கூறி 2 மாத குழந்தையுடன் இளம் பெண் தீவைத்து கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பம் மாவட்டம், சாய்பசா கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான Kolhan Singh, இரண்டு மனைவிகள் கொண்டவர். இரண்டாவது மனைவி 32 வயதான Jothi Singh, 2 வயது மகனும், 2 மாத ஆண் குழந்தையும் உடையவர்.

கிராமத்தினர் ஜோதி சிங்கு மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். இதனால், கடந்த 17ம் தேதி இரவு, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கொல்ஹன் சிங்குவின் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பெட்ரோலை கொண்டு ஜோதி சிங்குவையும் அவரது 2 மாத குழந்தையையும் தீ வைத்து கொன்றனர். இந்த சம்பவத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

கொல்ஹன் சிங்கு சிறிய காயங்களுடன் உயிர் தப்பி கிராமத்தை விட்டு ஓடியார். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.

போலீசார் சாய்பசா கிராமத்திற்கு சென்று, ஜோதி சிங்குவின் மற்றும் குழந்தையின் உடல்களை கண்டபோது அதிர்ச்சி அடைந்தனர். உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சம்பவத்தில் தொடர்புள்ள கிராமத்தினர் 4 பேரை கைது செய்தனர். விசாரணை தொடர்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!