உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வு – இலங்கையிலும் உச்சம் தொட்ட தங்க விலை!
உலகளாவிய அரசியல் அச்சுறுத்தல்கள், பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்புத் தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கம் வரலாறு காணாத உயர்வைப் பதிவு செய்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்த நிகழ்வைத் தொடர்ந்து, உலோகச் சந்தைகளில் பதட்டம் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, இன்று (ஜனவரி 5, 2026) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.8% உயர்ந்து $4,408 (£3,282) ஆக உயர்ந்துள்ளது. இது 2025ஆம் ஆண்டில் பதிவான அதிகபட்ச விலையை மீறிய புதிய சாதனையாகும். அதேபோல், வெள்ளியின் விலையும் 3.5% உயர்ந்து உலோக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொருளாதார நிபுணர்கள், உலகளாவிய அரசியல் அச்சுறுத்தல்கள், பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்புத் தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்த உலகச் சந்தை போக்கு, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உள்நாட்டு தங்க விலைகளில் திடீர் உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில், கடந்த ஜனவரி 2ஆம் தேதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு ரூ.356,000 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.3,000 உயர்ந்து ரூ.360,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் (8 கிராம் / 1 பவுன்): ரூ.332,000
21 கரட் (8 கிராம் / 1 பவுன்): ரூ.314,900
இந்த விலை உயர்வு, தங்க நகை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவரையும் பெரிதும் பாதிக்கிறது. சந்தை நிலவரங்கள் இன்னும் சில நாட்கள் அசைவற்று அல்லது உயர்ந்து கொண்டே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.