மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.
அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.
‘டிட்வா’ புயல் உள்ளிட்ட அனரத்தம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களால் மொத்தம் 56 பேர் இறந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர்,
இன்று (நவம்பர் 28, 2025) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் அதிக மழை பெய்துள்ளது.
கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பல மண்சரிவுகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.