மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு

Israel–Iran இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்ததையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் நேரடி விளைவாக சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி, சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் ஆகிய இடங்களுக்கு செல்ல இருந்த 17 புறப்பாடு விமானங்களும், அங்கிருந்து வர இருந்த 16 வருகை விமானங்களும் சேர்த்து மொத்தம் 33 சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் விமான சேவை பாதிப்பு நீடிக்கிறது. சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருந்த 18 புறப்பாடு விமானங்களும், அங்கிருந்து வர இருந்த 18 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 36 விமான சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வெளிநாட்டு பயணத் திட்டமிட்டிருந்த பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடைநிலைக் கடத்தல் விமானங்கள் மூலம் செல்ல இருந்த பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் தங்களது விமான நிறுவனங்களை முன்கூட்டியே தொடர்பு கொண்டு, விமானத்தின் நிலை மற்றும் புதிய நேர அட்டவணை குறித்து உறுதி செய்து கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர